- °C
Are You a business owner?
List Your Business / ADதஞ்சாவூர் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி அனைத்து வங்கிகளுடன் இணைந்து உயர்கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் இன்று (அக்.,5) நடைபெற்றது.
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. முரசொலி, மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர். உஷா புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 12 வங்கிகள் இம்முகாமில் கலந்து கொண்டனர். 128 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு விண்ணப்பம் செய்தனர். இம்முகாமில் 68 பேருக்கு ரூபாய் 5 கோடியே 38 லட்சம் மதிப்பிலான வங்கிக் கடனுதவிக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 919 பேருக்கு ரூ. 10. 80 கோடி வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள 1, 457 விண்ணப்பங்களின் மீது சம்பந்தப்பட்ட வங்கியாளர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வங்கி கடனுதவிகள் வழங்கிட முன்வர வேண்டும்" என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன், தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் நாகேஸ்வர ராவ், முன்னோடி வங்கிகள் மேலாளர் ர. பிரதீப் கண்ணன், பாரத் கல்லூரி தாளாளர் புனிதா கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Copyrights © 2025 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.